Press "Enter" to skip to content

கடந்த 22ந் தேதியில் இருந்து 5-வது முறையாக கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு

ஒரு லிட்டர் கல்லெண்ணெய் விலை இன்று 104 ரூபாய் 90 காசாக விற்பனை செய்யப்படுகிறது

சென்னை:

137 நாட்களுக்குப் பிறகு  கடந்த மார்ச் 22 ஆம் தேதி கல்லெண்ணெய், டீசல் விலை உயர்ந்தது. சமையல் எரிவாயு விலையும் அன்றே உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக கல்லெண்ணெய், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ரஷிய-உக்ரைன் போர் காரணமாக,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் கல்லெண்ணெய், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

அந்த வகையில், இன்று கல்லெண்ணெய் விலை லிட்டருக்கு 47 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி  ஒரு லிட்டர் கல்லெண்ணெய் 104 ரூபாய்

90 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 

டீசல் விலை 53 காசுகள் உயர்ந்து  ஒரு லிட்டர் டீசல்  95 ரூபாயாக விற்பனையாகிறது. 

சென்னையில் கடந்த 6  நாட்களில் 5 முறை கல்லெண்ணெய், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »