மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆம்லேட் விற்பனை செய்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar