Press "Enter" to skip to content

அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்துவதா? – படக்குழு மீது வழக்கு

மலையாளத்தில், வைக்கம் முகமது பஷீரின் சிறுகதையை தழுவி, ஏ.வின்சென்ட் இயக்கி, 1964-ம் ஆண்டு வெளியான படம், ‘பார்கவி நிலையம்’. பிரேம் நஸீர், மது, விஜய நிர்மலா நடித்த இந்தப்படத்துக்கு எம்.எஸ்.பாபுராஜ் இசை அமைத்திருந்தார். இதை, இயக்குநர் ஆஷிக் அபு, ‘நீல வெளிச்சம்’ என்ற பெயரில் இப்போது மறுதயாரிப்பு செய்துள்ளார்.

டோவினோ தாமஸ், ரீமா கல்லிங்கல் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 20ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில், பாபுராஜின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, இயக்குநர் ஆஷிக் அபு உள்ளிட்ட படக்குழுவினர் மீது அவர் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »