Press "Enter" to skip to content

ஏன் இந்த ஓய்வு? – கிச்சா சுதீப் விளக்கம்

பிரபல நடிகர் சுதீப், ‘விக்ராந்த் ரோணா’ படத்துக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தை அறிவிக்கவில்லை. இதுபற்றி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், 3 கதைகளைத் தேர்வு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

“விக்ராந்த் ரோணா படம் அதிக நாட்களை எடுத்துக்கொண்டதால், எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதை இப்போது எடுத்துக்கொண்டேன். நான் எடுத்திருக்கும் முதல் பிரேக் இதுதான். எனது அடுத்தப் படம் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். மூன்று கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். மூன்றுக்கும் நிறைய ‘ஹோம்ஒர்க்’ தேவைப்படுவதால், அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »