Press "Enter" to skip to content

நடிகர் அருண் பாண்டியனின் மகளை மணக்கிறார் அசோக் செல்வன்?

சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகளை நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். தொடர்ந்து ‘தெகிடி’ அவருக்கான அடையாளத்தை பெற்றுதந்தது. ‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக கவனம் பெற்றார். அண்மையில் வெளியான ‘போர் தொழில்’ பெரிய ஹிட்டடித்து அசோக் செல்வனை அனைத்து தரப்பினரிடையேயும் கொண்டு சேர்த்தது.

இந்நிலையில், நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் மணமுடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 13-ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த மணவீட்டார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »