திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் நடிகர் யோகி பாபு தனது குடும்பத்தினருடன் சுவாமி பார்வை செய்தார்.
கடந்த 2-ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, நாள்தோறும் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தனது குடும்பத்தினருடன் சுவாமி பார்வை செய்தார். மேலும், கோயில் வரலாற்றை சிவாச்சாரியர்களிடம் கேட்டறிந்தார்.
தனது 5-வது திருமண நாளை ஒட்டி குடும்பத்தினருடன் அவிநாசியப்பரை பார்வை செய்ததாக நடிகர் யோகி பாபு தெரிவித்தார். கோயில் குறித்து ஏற்கெனவே இயக்குநர் சுந்தர்.சி பலமுறை கூறியிருந்ததால், குடும்பத்துடன் பார்வை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன் எனக் கூறினார். அப்போது அங்கு கூடிய ரசிகர்கள், நடிகர் யோகி பாபுவுடன் அலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Source: Hindu