2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
செயின்ட்ஜார்ஜ்:
வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 சுற்றிப் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 166 ஓட்டத்தை எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 167 ஓட்டத்தை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கேப்டன் பவுமா 33 பந்தில் 46 ரன்னும் (5பவுண்டரி, 1 சிக்சர்), ஹென்டிரிக்ஸ் 30 பந்தில் 42 ரன்னும் (5பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மெக்காய் 3 மட்டையிலக்குடும், கெவின்சின் கிளையர் 2 மட்டையிலக்குடும் எடுத்தனர்.
167 ஓட்டத்தை இலக்குடன் விடையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 150 ஓட்டத்தை எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 16 ஓட்டத்தில் வெற்றி பெற்றது.
பிளட்சர் அதிகபட்சமாக 35 ரன்னும், பேபியன் ஆலன் 34 ரன்னும் எடுத்தனர். ரபடா 3 மட்டையிலக்குடும், லிண்டி 2 மட்டையிலக்குடும், நிகிடி, நோர்ட்ஜே, ஷம்சி தலா ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar