Press "Enter" to skip to content

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதரானார் சிவகார்த்திகேயன்

கனா படத்தை தயாரித்ததன் மூலம் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்துள்ளது.

அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்போது சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

‘கனா’ என்ற படத்தை தயாரித்ததால் அந்த படத்தை பார்த்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளம்பரம் செய்ய என்னை அணுகினர். நாம் அனைவரும் இந்த போட்டிக்கு ஆதரவு தரவேண்டும். நமது அணியை மட்டுமல்லாது அனைத்து வீராங்கனைகளுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என கணிக்கிறேன். அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »