Press "Enter" to skip to content

கூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு- என்பிஏ போட்டிகள் ரத்து

அமெரிக்காவில் கூடைப்பந்து வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, இந்த சீசன் என்பிஏ போட்டிகள் நிறுத்தப்பட்டன.

லாஸ் ஏஞ்சல்ஸ்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 337 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன்மூலம் கொரோனா வைரசுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 633 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் மக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அவ்வகையில், அமெரிக்காவின் பிரபல விளையாட்டான கூடைப்பந்து தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜாஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால், இந்த சீசன் போட்டி நிறுத்தப்பட்டிருப்பதாக தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ) தெரிவித்துள்ளது. எப்போது போட்டி தொடங்கும் என அறிவிக்கப்படவில்லை.

என்பிஏ லீக் தொடரில் நேற்று ஜாஸ்-தண்டர் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு, வீரர் ஒருவரின் ரத்தப் பரிசோதனை முடிவில், கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட வீரர் அப்போது அரங்கில் இல்லை. எனினும் பாதுகாப்பு கருதி போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »