Press "Enter" to skip to content

ஓய்வுக்கு முன் டி20 உலக கோப்பையில் விளையாட விரும்புகிறேன்: முகமது ஹபீஸ் சொல்கிறார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான முகமது ஹபீஸ், ஓய்வுக்கு முன் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவர் முகமது ஹபீஸ். 39 வயதாகும் இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது ஒயிட்பால் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகமது ஹபீஸ் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பை தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அதன்பிறகு டி20 லீக்குகளில் விளையாடுவதில் கவனம் செலுத்துவேன். பயிற்சியாளராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் மன்தில் அது எப்போது உதிக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது’’ என்றார்

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »