தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரேனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 50-க்கு கீழே இருந்த நிலையில் இன்று 50-க்கு மேல் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-க்கு மேலாக இருந்து வந்தது.
இந்நிலையில்தான் கடந்த மூன்று நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-க்கு கீழ் குறைந்தது. 14-ந்தேதி 31 ஆகவும், 15-ந்தேதி 38 ஆகவும், நேற்று 25 ஆகவும் இருந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவிடும் என்று நம்பப்பட்டது.
இந்நிலையில் இன்று 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 283 பேர் குணமடைந்துள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar