Press "Enter" to skip to content

டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உதவிகரமாக இருந்தார்: அக்சார் பட்டேல்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சுமூகமாக செல்ல கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தார் என அக்சார் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சார் பட்டேல். ஐந்து ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அக்சார் பட்டேல், கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறினார். ஐந்து கோடி ரூபாய் கொடுத்து அந்த அணி வாங்கியது.

புதிய அணியுடன் சுமூகமாக செல்ல கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தார் என அக்சார் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்சார் பட்டேல் கூறுகையில் ‘‘நான் இந்திய அணிக்காக விளையாடும்போது ஷ்ரேயாஸ் அய்யர் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். நான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வரும்போது, மிகவும் எளிதாக இருந்தது. ஏனென்றால், நாங்கள் ஒருவருக்கு ஒருவரை நன்றாக தெரிந்து வைத்துள்ளோம்.

மைதானத்தில் எனக்கு சுதந்திரம் கொடுத்து நான் விரும்பும் வகையில் பீல்டிங் அமைக்க வழிவகை செய்தார். அவர் மிகவும் அமைதியானவர். அவருக்கு கீழ் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »