Press "Enter" to skip to content

பெண்கள் ஒருநாள் மற்றும் U-19 உலக கோப்பை தகுதி சுற்று தொடர்கள் ஒத்திவைப்பு: ஐசிசி

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான தகுதி சுற்று தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஜூன், ஜூலையில் கூட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற சந்தேகம்தான் எனக் கருதப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் ஜூலை 3-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடைபெற இருந்தது. தற்போது இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2022-ம் ஆண்டுக்கான U-19 உலக கோப்பை தொடருக்கான ஐரோப்பிய மண்டலத்திற்கான தகுதிச் சுற்று  ஜூலை 24-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை நடைபெற இருந்தது. இந்தத் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »