Press "Enter" to skip to content

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ராணி ராம்பால் பெயர் பரிந்துரை

இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி:

விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான கேல் ரத்னா, அர்ஜுனா ஆகிய விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயரை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய புதன்கிழமை கடைசி நாளாகும்.

இந்நிலையில், இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஆக்கி சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் அணி, 2017-ல் ஆசியக் கோப்பைப் போட்டியை வென்றது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெறுவதற்கு ராணி ராம்பால் முக்கியப் பங்கு வகித்தார்.

2016-ல் அர்ஜூனா விருதும், 2020-ல் பத்மஸ்ரீ  விருதும் வென்ற  ராணி ராம்பால் தற்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7½ லட்சம் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »