கொழும்பு புறநகரில் இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் மோதி 74 வயது முதியவர் பலியானாதால், மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குசால் மெண்டிஸ்
கொழும்பு புறநகரில் இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் மோதி 74 வயது முதியவர் பலியானாதால், மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ். 25 வயதாகும் இவர் இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் மற்றும் 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்று அதிகாலை கொழும்பு புறநகர் பகுதியில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக கார் 74 வயதான முதியவர் மீது மோதியுள்ளது. இதில் முதியவர் உயிரிழந்தார். இதனால் குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குசால் மெண்டிஸ் நீதிபதி முன் ஆஜர்படுத்த இருக்கிறார்.
Related Tags :
Source: Maalaimalar