Press "Enter" to skip to content

சவுராஷ்டிர வீரர் ஷெல்டன் ஜாக்சன் புதுச்சேரி அணிக்காக விளையாடுகிறார்

ரஞ்சி கோப்பையை சவுராஷ்டிர கிரிக்கெட் அணி கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த ஷெல்டன் ஜாக்சன் புதுச்சேரி அணிக்காக விளையாட இருக்கிறார்.

சவுராஷ்டிரா ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தவர் ஷெல்டன் ஜாக்சன். 2019-2020 ரஞ்சி கோப்பையை சவுராஷ்டிரா அணி முதன்முறையாக கைப்பற்றியது. இதற்கு ஜாக்சனின் சிறப்பான பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது. அவர் 10 ஆட்டங்களில் 809 ரன்கள் குவித்தார். சராசரி 50.56 ஆகும்.

தற்போது அவர் சவுராஷ்டிர கிரிக்கெட் அணி இருந்து விலகி புதுச்சேரி அணியில் விளையாட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஷெல்டன் ஜாக்சன் கூறுகையில் ‘‘இது மிகவும் கடினமான முடிவு. இது எளிதான அல்ல, என்றாலும் தொழில்முறை கிரிக்கெட்டில் மற்றொரு அணி அல்லது மாநிலத்திற்காக விளையாட இது சரியான நேரம் என்று உணர்கிறேன்’’ என்றார்.

ஏற்கனவே, பங்கங் சிங், பராஸ் டொக்ரா ஆகிய இரண்டு வீரர்களும் புதுச்சேரி அணிக்கு மாறியுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »