Press "Enter" to skip to content

இங்கிலாந்துக்கு எதிரான 2வது சோதனை: பாகிஸ்தான் 2 மட்டையிலக்குடுக்கு 85 ஓட்டங்கள் – மழையால் ஆட்டம் பாதிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சவுதம்டன்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷான் மசூத் மற்றும் அபித் அலி அடித்து விளையாட தொடங்கினர்.  எனினும் மசூத் (1) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து உள்ளார்.

அபித்துடன் இணைந்து விளையாடிய கேப்டன் அசார் அலி (20 ரன்கள்) ஆன்டர்சன் பந்து வீச்சில் பர்ன்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  தொடர்ந்து பாபர் அசாம் (7) மற்றும் அபித் (49) ரன்கள் எடுத்து விளையாடிய பொழுது மழை குறுக்கிட்டது.  இதனால் ஆட்டம் பாதிப்படைந்தது.  இங்கிலாந்தின் ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  பாகிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »