Press "Enter" to skip to content

ஐபிஎல் 2020 – 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்

அசத்தலான பந்து வீச்சினால் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

துபாய்:

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடி ஓட்டத்தை சேர்த்தனர். பிரித்வி ஷா அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் மட்டையிலக்கு இழப்பின்றி 88 ஓட்டங்கள் அடித்தது.

இறுதியில், 20 சுற்றுகள் முடிவில் டெல்லி அணி 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 64 ரன்னிலும், தவான் 35 ரன்னிலும் அவுட்டாகினர். ரிஷப் பண்ட் 34 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ரன்னிலும், வாட்சன் 14 ரன்னிலும் அவுட்டாகினர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது.

ஜாதவ் 26 ரன்னிலும் டூ பிளசிஸ் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. டோனி 15 ஓட்டத்தில் அவுட்டானார்.

டெல்லி அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தியது. பீல்டிங்கும் சிறப்பாக செய்தது. இதனால் சென்னை அணி ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை.

இறுதியில் சென்னை அணி 7 மட்டையிலக்கு இழப்புக்கு 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »