Press "Enter" to skip to content

மயங்க் அகர்வால் அதிரடி சதம்: பஞ்சாப் 15 சுற்றில் மட்டையிலக்கு இழப்பின்றி 172

மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அட்டகாசமான வகையில் விளையாட கிங்ஸ் லெவன் பஞ்சாப் 15 சுற்றில் மட்டையிலக்கு இழப்பின்றி 172 ஓட்டங்கள் அடித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் மட்டையாட்டம் செய்து வருகிறது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங்க் அகர்வால் பட்டைய கிளப்பினார்.

இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 4.3 சுற்றில் 50 ஓட்டத்தில்க் கடந்த பஞ்சாப், 8.4 சுற்றில் 100 ஓட்டத்தில்க் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார்.

10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மட்டையிலக்கு இழப்பின்றி 110 ஓட்டங்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.

அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். 13.2 சுற்றில் பஞ்சாப் அணி 150 ஓட்டத்தில்க் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். கடந்த போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »