Press "Enter" to skip to content

பிரெஞ்ச் ஓபன்: 11-ம் நிலை வீரர் டேவிட் கோபின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னில் ஆண்கள் ஒற்றையருக்கான தொடக்க சுற்றில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் முதன்மைச் சுற்று இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் 11-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின் தரநிலை பெறாத இத்தாலியின் ஜேனிக் சின்னெரை எதிர்கொண்டார்.

இதில் டேவிட் கோபின் 5-7, 0-6,3-6 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோர்டா, டி. ஃப்ரிட்ஸ், தென்கொரியாவின் நிசிகோரி, அர்ஜென்டினாவின் கோரியா, 21-ம் நிலை வீரர் இஸ்னர், ஆஸ்திரியாவின் ரோடியன்நவ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »