Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷார்ஜா:

டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களும் அடிக்க டெல்லி 150 ரன்களை தாண்டும் வாய்ப்பை பெற்றது. அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ஓட்டங்கள் அடித்தார். 

இறுதியில், டெல்லி அணி 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 3 மட்டையிலக்கு எடுத்து அசத்தினார்.

இதையடுத்து, 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஓரளவு தாக்குப் பிடித்து 34 ஓட்டங்கள் அடித்து வெளியேறினார். ஸ்மித் 24 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

டெல்லி அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். இதனால் ராஜஸ்தான் அணியினர் ஓட்டங்கள் எடுக்கத் தவறினர்.

மற்ற ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ராகுல் டெவாட்டியா கடைசி வரை போராடினார். அவர் 38 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 138 ஓட்டங்களில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. இதனால் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. 

டெல்லி அணி சார்பில் ரபாடா 3 மட்டையிலக்குடும், அஷ்வின், ஸ்டாய்னிஸ் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »