Press "Enter" to skip to content

அஸ்தானா ஓபன் டென்னிஸ்- இந்திய வீரர் திவிஜ் சரண் காலிறுதிக்கு முன்னேற்றம்

அஸ்தானா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரிட்டன் வீரர் லூக் பாம்பிரிட்ஜ் ஜோடி காலிறுதிக்கு முற்தைய சுற்றில் வெற்றி பெற்றது.

நூர் சுல்தான்:

கஜகஸ்தான் நாட்டில் அஸ்தானா ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரிட்டன் வீரர் லூக் பாம்பிரிட்ஜுடன் இணைந்து விளையாடி வருகிறார். 

திவிஜ் சரண் ஜோடி நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஏரியல் பெகர் (உருகுவே)-கான்சலோ எஸ்கோபர் (ஈக்வடார்) ஜோடியை எதிர்கொண்டது.

சுமார் ஒன்றரை மணி நேரம் வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் திவிஜ் சரண்- லூக் பாம்பிரிட்ஜ் ஜோடி 7-5, 4-6, 10-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »