Press "Enter" to skip to content

ருத்துராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலியை நினைவு படுத்துகிறார்: டு பிளிஸ்சிஸ் புகழாரம்

ருத்துராஜ் கெய்க்வாட் இளம் வயது விராட் கோலியை நினைவு படுத்துகிறார் என்று சிஎஸ்கே வீரர் டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறிவிட்டாலும் தங்களுடைய கடைசி 3 போட்டிகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. இந்த மூன்று போட்டியிலும் தொடக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

தொடக்கத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட இரண்டு போட்டிகளில் ஒன்றில் டக் அவுட், ஒன்றில் சொற்ப ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், இறுதியில் அசத்தி நல்ல பெயரை வாங்கியுள்ளார் ருத்துராஜ்.

இதுகுறித்து சி.எஸ்.கே. பேட்ஸ்மானான டு பிளிஸ்சிஸ் கூறும்போது, ‘‘இந்த பருவம் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. ஆனால், நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம். எங்களுடைய அணியில் விளையாடும் ருத்துராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்’’ என்றார்.

மேலும் ‘‘நெருக்கடியான நேரத்தில் நின்று விளையாடுகிறார் என எனக்கு தோன்றுகிறது. இளம் வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இதுபோன்ற தகுதிகளே தேவையாக உள்ளது. எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மிச்சமிருக்கிறது. முழுவதும் ஃபிட்டாகவே இருக்கிறேன். அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »