ஷிகர் தவான் மற்றும் அஜிங்கியா ரகானே அரை சதம் அடிக்க 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி.
அபுதாபி:
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஜோஷ் பிலிப் 12 ரன்னிலும், விராட் கோலி 29 ரன்னிலும் அவுட்டாகினர். தேவ்தத் படிக்கல் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து 50 ஓட்டத்தில் வெளியேறினார்.
அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் 21 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 17 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், ஆர்சிபி 20 சுற்றில் 7 மட்டையிலக்குடுக்கு 152 ஓட்டங்கள் அடித்தது.
டெல்லி அணியில் நோர்ஜோ 3 மட்டையிலக்குடும், ரபடா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 54 ஓட்டத்தில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய அஜிங்கியா ரகானேவும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 60 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ரிஷப் பண்ட்டும், ஸ்டோய்னிசும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar