Press "Enter" to skip to content

முதல் ஓவரிலேயே மட்டையிலக்குடை அதிக முறை பறிகொடுத்த அணிகள் விவரம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஐபிஎல் பருவத்தில் அதிக முறை முதல் ஓவரிலேயே மட்டையிலக்குடை இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

ஐபிஎல் குவாலிபையர்-1 நேற்று துபாயில் நடைபெற்றது. 201 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரென்ட் பவுல்ட் முதல் ஓவரை வீசினார்.

2-வது பந்தில் பிரித்வி ஷாவையும், இதே சுற்றில் ரகானேவையும் வீழ்த்தினார். இருவரும் ஓட்டங்கள் ஏதும் எடுக்கவில்லை. மெய்டன் ஓவராக அமைந்தது.

டெல்லி அணி இந்த பருவத்தில் முதல் சுற்றில் மட்டையிலக்குடை அதிக முறை இழந்த அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ள்ளது.

இதுவரை மொத்த 15 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 9 முறை முதல் ஓவரிலேயே மட்டையிலக்குடை இழந்து மோசமான சாதனையை பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று முறை முதல் ஓவரிலேயே மட்டையிலக்குடை இழந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா இரண்டு முறை முதல் ஓவரிலேயே மட்டையிலக்குடை இழந்ததுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தலா ஒருமுறை முதல் ஓவரிலேயே மட்டையிலக்குடை இழந்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »