Press "Enter" to skip to content

மும்பைதான் சிறந்த ஐபிஎல் அணி: இதில் எந்த சந்தேகமும் இல்லை- டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிதான் சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த 13-வது ஐபிஎல் 20 சுற்றிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய சிறந்த அணி மும்பை இந்தியன்ஸ்தான் என்று தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரருமான டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் சிறந்த அணி மும்பைதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், டிரென்ட் போல்ட், பும்ரா ஆகியோர் முத்திரை பதித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »