Press "Enter" to skip to content

வீரருக்கு கொரோனா: தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதாக இருந்தது. இரு அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளனர்.

இன்றைய போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கடைசி கட்ட கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது, அப்போது தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இன்றைய போட்டி 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2-வது போட்டி 7-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதியும் நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »