ஆஸ்திரேலியாவின் சோதனை அணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இந்தியாவுக்கு எதிராக வேறு மாதிரியான திட்டம் வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடர் வருகிற வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி நெருக்கடி கொடுப்பார்களோ? அதேபோல் சுழற்பந்து வீச்சில் தனிநபர் ஒருவராக நாதன் லயன் நெருக்கடி கொடுக்கக் கூடியவர்.
கடந்த முறை இந்தியாவுக்கு எதிராக தொடரை இழந்த நிலையில், இந்த முறை வேறு மாதிரியான திட்டம் வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘கடந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராக என்ன நடந்தது. எப்படி அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்பது பற்றி எங்களுக்கு வெளிப்படையாக தெரியும். நாங்கள் அது பற்றி பேசியுள்ளோம். வேறு மாதிரியா திட்டத்துடன் களம் இறங்குவோம்.
இந்தியாவக்கு எதிராக என்னுடைய திட்டம் குறித்து வெளிப்படையாக கூற இயலாது. ஆனால் இந்திய ஆஸ்திரேலியா அணியில் சிறந்த அதிர்வு இருக்கும். நாங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பாக இருந்ததை விட தற்போது மிகவும் சிறந்த இடத்தில் இருக்கிறோம்.
இந்த வலுவான அணியில் நான் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் கொஞ்சம் கூடுதலாக பயிற்சி செய்துள்ளோம். களத்தில் இறங்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar