Press "Enter" to skip to content

ஐஎஸ்எல் கால்பந்து: ஐதராபாத் 2-வது வெற்றியை பெறுமா? பெங்காலுடன் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித்தொடரில் இன்று நடக்கும் 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

கோவா:

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித்தொடரில் இன்று நடக்கும் 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 1 வெற்றி, 3 டிராவுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஐதராபாத் அணி, ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், ஏ.டி.கே.மோகன்பகன் ஆகிய அணிகளுடன் டிரா செய்தது.

ஈஸ்ட்பெங்கால் அணி இதுவரை விளையாடி உள்ள 4 ஆட்டத்தில் 3 தோல்வியை சந்தித்து உள்ளது. 1 ஆட்டத்தில் டிரா செய்தது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

ஆனால் அந்த அணி வீரர்கள் வெற்றி பெற ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமா கும்.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »