Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவுடன் முதல் சோதனை- இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் சோதனைடில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இரு அணிகள் இடையே 4 சோதனை கொண்ட தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் சோதனைடில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலி தலைமையில் ஆன மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, அஸ்வின் , ஊமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  

ரீஷப் பந்துக்கு பதிலாக விருதிமான் சாஹா மட்டையிலக்கு கீப்பராக விளையாட உள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட சுப்மன் கில், கேஎல்ராகுல் ஆகியோர் அணியில் இடம்பெற வில்லை. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »