Press "Enter" to skip to content

பிங்க்-பாலில் அச்சுறுத்தலாக விளங்கும் மிட்செல் விண்மீன்க்: இந்தியா சமாளிக்குமா?

இந்தியாவுக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும், மிட்செல் விண்மீன்க் பிங்க் பாலில் அச்சுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் சோதனை நாளை அடிலெய்டில் நடக்கிறது. இந்த சோதனை பகல்-இரவு டெஸ்டாக பிங்க்-பாலில் நடக்கிறது.

ஆஸ்திரேலியா இதுவரை விளையாடியுள்ள பிங்க் பால் போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்தியா வங்காளதேசத்திற்கு எதிராக மட்டுமே விளையாடியுள்ளது.

ஒயிட்பால் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் நேர்த்தியாக பந்து வீசவில்லை. மேலும், குடும்ப உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடரில் இருந்து வெளியேறினார்.

தற்போது சோதனை போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளார். பிங்க்-பால் போட்டியில் மிட்செல் விண்மீன்க் எப்படிபட்டவர் என்பதை அவரது சாதனையே கூறும். ஆம்…. 7 போட்டிகளில் 42 மட்டையிலக்கு வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 6 மட்டையிலக்கு வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த சராசரி 19.23 ஆகும்.

அதனால் நாளைய போட்டியிலும் இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »