Press "Enter" to skip to content

ஐஎஸ்எல் கால்பந்து: பெங்களூர் அணிக்கு 3-வது வெற்றி – ஒடிசாவை வீழ்த்தியது

ஐஎஸ் எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கோவா:

11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர்-ஒடிசா அணிகள் மோதின. இதில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணிக்காக சுனில் சேத்ரி 38-வது நிமிடத்திலும், சில்வா 79-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஒடிசா தரப்பில் டெய்லர் 71 நிமிடத்தில் கோல் அடித்தார்.

பெங்களூர் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்று, 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒடிசா அணி 5-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஒரு புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறது.

இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-ஜாம்செட்பூர் அணிகள் மோதுகின்றன.

கவுகாத்தி அணி 10 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது பெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஜாம்செட்பூர் அணி 7 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்கான வேட்கையில் உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »