ஆக்லாந்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் மட்டையாட்டம் தேர்வு செய்தது.
39 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு மட்டையிலக்குடுகளை இழந்தது. ஜேக்கப் டஃபி இதில் மூன்று மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் கேப்டன் சதாப் கான் 42 ரன்களும், பஹீம் அஷ்ரப் 18 பந்தில் 31 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 153 ஓட்டங்கள் அடித்தது. ஜேக்கப் டஃபி 4 சுற்றில் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். குக்கெலின் 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.
பின்னர் 154 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 6 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் டிம் செய்ஃபெர்ட் 57 ஓட்டங்கள் விளாசினார்.
மார்க் சாப்மேன் 20 பந்தில் 34 ஓட்டங்கள் அடிக்க நியூசிலாந்து 18.5 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்து 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar