Press "Enter" to skip to content

பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிசிசிஐ அதிகாரி தகவல்

2021 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி நடைபெற இருப்பதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2021 பருவத்தை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. முதற்கட்டமாக 8 அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பெயரையும், விடுவித்த வீரர்கள் பெயரையும் ஜனவரி 20-ந்தேதிக்குள் (நேற்றுமுன்தினம்) வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. அதன்படி 8 அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில் பிப்ரவரி 18-ந்தேதி வீரர்கள் ஏலம் நடைபெறும். ஆனால் எங்கு வைத்து நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் 2021 பருவம் இந்தியாவில் நடைபெறுமா? மீண்டும் வெளிநாட்டில் நடைபெறுமா? என்பத குறித்து பிசிசிஐ இதுவரை உறுதியான முடிவு எடுக்கவில்லை.

இந்தியா – இங்கிலாந்து இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று முடிந்தால், ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »