Press "Enter" to skip to content

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : இந்திய ஜோடிகள் ஏமாற்றம்

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடி தோற்று நடையை கட்டியது.

பாங்காக்:

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 18-21 என்ற நேர் செட்டில் ஆரோன் சியா- சோ வூய் யிக் (மலேசியா) இணையிடம் தோற்று நடையை கட்டியது. இதே போல் கலப்பு இரட்டையரிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் அரைஇறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-18, 12-21 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்தின் டேச்சாபோல்-சப்சிரீ இணையிடம் வீழ்ந்தது.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-19, 21-15 என்ற நேர் செட்டில் அன் சி யங்கை (தென்கொரியா) விரட்டியடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் மகுடத்துக்கான ஆட்டத்தில் கரோலினா மரின், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) எதிர்கொள்கிறார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »