அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ஓட்டங்கள் விளாசியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
மும்பை:
ஐபிஎல் 2021 சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் மட்டையாட்டம் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 மட்டையிலக்குடுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ஓட்டங்கள் குவித்தார். மொயீன் அலி 36 ஓட்டங்கள், அம்பதி ராயுடு 23 ஓட்டங்கள், ரவீந்திர ஜடேஜா 26 ஓட்டங்கள் (நாட் அவுட்) அடித்தனர்.
கேப்டன் டோனி ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ஓட்டங்கள் விளாசினார். அவரது பங்களிப்பால் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
டெல்லி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு எடுத்தனர். அஷ்வின், டாம் கர்ரன் தலா ஒரு மட்டையிலக்கு எடுத்தனர். இதனையடுத்து 189 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடுகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar