சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எந்தவொரு பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காத நிலையில், சேத்தன் சகாரியா 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ருத்துராஜ் 10 ஓட்டத்தில் வெளியேறினார்.
அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. என்றாலும் டு பிளிஸ்சிஸ் 33 ரன்னிலும், மொயீன் அலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது சிஎஸ்கே 9.2 சுற்றில் 75 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அதன்பின் சிஎஸ்கே வீரர்கள் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. என்றாலும் ரெய்னா (18), அம்பதி ராயுடு (27), டோனி (18), சாம் கர்ரன் (13), பிராவோ (20 நாட்அவுட்) ஓரளவிற்கு ஓட்டங்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 188 ஓட்டங்கள் அடித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேத்தன் சகாரியா 4 சுற்றில் 36 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார். கிறிஸ் மோரிஸ் 2 மட்டையிலக்கு வீழ்த்தினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar