Press "Enter" to skip to content

அர்ஜூனா, துரோணாச்சார்யா உள்ளிட்ட தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – மத்திய விளையாட்டு அமைச்சகம்

விருதுக்கு தகுதி படைத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி கடைசி நாளாகும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுக்கு சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு தயான் சந்த் உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான இந்த விளையாட்டு விருதுக்கு தகுதி படைத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி கடைசி நாளாகும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கான பரிந்துரைகள் கணினிமய மூலம் ஏற்றுக்கொள்ளப்படும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்முறையாக தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பங்களை விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. அதேபோல் இந்த ஆண்டும் சுய பரிந்துரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். வழக்கம் போல் தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் விருதுக்கு உரிய நபர்களை பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேல்ரத்னா விருது பெறுபவர்களுக்கு ரூ.25 லட்சமும், அர்ஜூனா, துரோணாச்சார்யா விருது பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சமும், தயான் சந்த் விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »