Press "Enter" to skip to content

ரிஷப் பண்ட் மிகவும் அபாயமானவர்: நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் சொல்கிறார்

இங்கிலாந்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ந்தேதி தொடங்குகிறது. இப்போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது.

இரண்டு அணிகளுக்கும் இங்கிலாந்து பொதுவான இடமாக இருந்தாலும், இங்கிலாந்து சூழ்நிலை ஸ்விங் பந்திற்கு சாதகமாக இருக்கும். நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன் ஆகியோர் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்யக் கூடியவர்கள். இதனால் இந்தியாவுக்கு இறுதிப் போட்டி சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மிகவும் அபாயகரமானவர் என்று நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜர்கென்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜர்கென்சன் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் மிகவும் அபாயகரமானவர். போட்டியை தனி நபரால் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இங்கிலாந்துக்கு எதிராகவும் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் விளையாடக் கூடியவர். ஆனால் அவர் மட்டையிலக்குடை வீழ்த்தக்கூடிய சாத்தியமான வாய்ப்புகள் வரும்.

எங்களுடைய பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது அவசியம். ரிஷப் பண்ட் ஓட்டங்கள் குவிக்கும்போது, பொறுமையாக இருந்து செயல்பட வேண்டும். அது கஷ்டமாகத்தான் இருக்கும். அவர் அதிரடியை கட்டுப்படுத்துவது கடினம். இதை நாங்கள் மனதில் வைத்திருப்போம்.

விராட் கோலியும், ஜேமிசனும் ஆர்சிபி-க்காக விளையாடும்போது இறுதிப் போட்டி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்திருப்பார்கள். ஆகவே, சுவாரஸ்யமாக நேரங்கள் இருக்கும். கைல் ஜேமிசன் பந்து வீச்சை பார்க்க விருந்தாக அமையும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »