இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் வருமானத்தை கொண்டு வருகிறது எனவும் இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறு மாதிரி இருக்கும் எனவும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹேட்லி கூறியுள்ளார்.
லண்டன்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரிச்சர்ட் ஹேட்லி. அந்நாட்டுக்கு பெருமை சேர்த்த அவர் சோதனை கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து கூறியதாவது:-
இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் வருமானத்தை கொண்டு வருகிறது. இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறு மாதிரி இருக்கும். எனவே கிரிக்கெட்டுக்கு இந்தியா தேவை.
இந்திய அணி சோதனை கிரிக்கெட்டுக்கு அற்புதமான பங்களிப்பை அளித்துள்ளது. இந்தியாவால்தான் சோதனை கிரிக்கெட் புத்துயிர் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய பயணத்தில் 36 ரன்களுக்கு சுருண்டு பின்னர் அபாரமாக விளையாடிய விதம் அற்புதமானது.
தோல்வியில் இருந்து மீண்டு வந்தார்கள். இதனால் சோதனை கிரிக்கெட்டுக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது.
அதிகமான இளைஞர்கள் இந்திய அணிக்கு தேர்வாகி நன்றாக விளையாடி வருகிறார்கள். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் உள்ளார்கள்.
உலக சோதனை சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்வது கடினமானது.
இவ்வாறு ரிச்சர்ட் ஹேட்லி கூறி உள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடக்கிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar