Press "Enter" to skip to content

சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் – ஐ.சி.சி. தகவல்

முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (ஜூன்18-22) மோதுகின்றன.

கோப்புப்படம்

துபாய்:

முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (ஜூன்18-22) மோதுகின்றன. இதையொட்டி மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் வருகிற 2-ந்தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு மறுநாள் இங்கிலாந்தை அடைகிறார்கள். வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

ஐ.சி.சி

அங்கு சென்றதும் இந்திய வீரர்கள் நேரடியாக சவுத்தம்டன் மைதான பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்துலை தொடங்குவார்கள். தனிமைப்படுத்தலின் போதும் முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிமைகாலம் எத்தனை நாட்கள் என்ற விவரத்தை ஐ.சி.சி. குறிப்பிடவில்லை.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »