Press "Enter" to skip to content

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் எனத் தகவல்

வீரர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர்- அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆறு மைதானங்களில் ஐபிஎல் 2021 பருவம் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. சுமார் ஒருமாத காலம் சிறப்பான வகையில் போட்டிகள் சென்ற நிலையில், மே 3-ந்தேதி கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் டெல்லி அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 4-ந்தேதி ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் – அக்டோபரில் மீதமுள்ள கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த பேட் கம்மின்ஸ், எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பேட் கம்மின்ஸ் நீண்ட நாட்களாக பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து விளையாடியுள்ளார். மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பாததற்கு அதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »