Press "Enter" to skip to content

தென்ஆப்பரிக்காவுக்கான தனி ஸ்டைலில் நாங்கள் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்புவது அவசியம்: டீன் எல்கர்

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு சோதனை போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

தென்ஆப்பிரிக்கா என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களுக்கென என ஒரு இடம் உண்டு. பந்து வீச்சு, மட்டையாட்டம், பீல்டிங் என மூன்று துறைகளிலும் அசத்தக் கூடியவர்கள். ராசியில்லாத அணி என்பதை தவிர்த்து அந்த அணியிடம் எந்தவிதமான பலவீனத்தையும் காண முடியாது.

கல்லீஸ், டொனால்டு, பொல்லாக், டி வில்லியர்ஸ், குளுஸ்னர், கிர்ஸ்டன், ஹசிம் அம்லா என ஜாம்பவான்கள் விளையாடிய அணி. ஆனால் கடந்த இரண்டு வருடங்களால் அந்த அணியால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

டு பிளிஸ்சிஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் டி காக் மூன்று வடிவிலான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய பணிச்சுமை காரணமாக சோதனை அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நீண்டகால கேப்டனாக தொடக்க பேட்ஸ்மேன் டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில்தான் தென்ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜூன் 10-ந்தேதி தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்கா அணி 2019-ல் இருண்டு 9 சோதனை கிரிக்டெக் போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஐந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவிற்கான வழயில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டியது அவசியம் புதுக்கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் ‘‘தற்போது நாங்கள் புது அத்தியாயம். நாங்கள் அதிகமான போட்டியில், சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். கடந்த காலகட்டத்தில் நாங்கள் மிகவும் சீராக இருக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

எங்களுடைய உச்சக்கட்ட திறமை இன்று வெளிப்படவில்லை. வழக்கமான கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிகமான தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எங்களுடைய பாணியில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம்.

நாங்கள் எப்போதும் சிறந்த மட்டையாட்டம் ஆர்டரை வைத்துள்ளோம். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களையும் வைத்துள்ளோம். இதுதான் தென்ஆப்பிரிக்கா வழி. மிகப்பெரிய சதம், ஐந்து மட்டையிலக்கு வீழ்த்தி, பழைய நிலைக்கு திரும்புவது அவசியம். கடந்த சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ, அதேபோல் மீண்டும் முன்னேற்ற அடைய முடியும் என்பதுபோல் உணர்கிறேன். இதுதான் என்னுடைய மிகப்பெரிய இலக்கு. இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »