Press "Enter" to skip to content

ஒரே ஒரு ட்வீட்… சாய்னா நேவாலை விமர்சித்த எதிர்க்கட்சிகள்

சாய்னா எப்போது விளையாடுவதை நிறுத்துவார்? என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா கேட்டுள்ளார்.

புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 75 தலைவர் பதவிகளில் 67 இடங்களை பாஜக கைப்பற்றியது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 5 சீட்களை மட்டுமே வென்றது. 

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பாஜகவினருக்கு, இந்த வெற்றி உத்வேகத்தை கொடுத்துள்ளது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். 

அவ்வகையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், யோகி ஆதித்யநாத்துக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த பதிவு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பெற்றுள்ளது.

‘சாய்னா நேவால் அரசாங்க பேட்மிண்டன் வீராங்கனை’ என ராஷ்டிரிய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி கூறி உள்ளார்.

சாய்னா எப்போது விளையாடுவதை நிறுத்துவார்? என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா கேட்டுள்ளார். 

ஐதராபாத்தைச் சேர்ந்த சாய்னா நேவால், கடந்த ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »