ஒலிம்பிக் தொடக்க விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், குதிரையேற்றம் போட்டியில் ட்ரெஸ்சாஜ் பிரிவுக்கான குதிரைகள் ஆய்வு இன்று நிறைவடைந்தன.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சாஃப்ட்பால், மகளிர் கால்பந்து மற்றும் வில்வித்தை என போட்டிகளின் ஆரம்ப சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாளை ( ஜூலை 24-ந்தேதி) குதிரையேற்றம் போட்டியில் நாளை ட்ரெஸ்சாஜ் கிராண்ட் பிரி அணி மற்றும் ஒற்றையர் பிரிவுக்கான முதல் நாள் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து குதிரைகளுக்குமான ஆய்வு இன்று நடைபெற்றது. தற்போது, அனைத்து குதிரைகளும் சரி பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar