புஜி மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்ளிங் போட்டியில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு கரபஸ் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று, புஜி மலைப்பகுதியில் சைக்ளிங் போட்டி நடைபெற்றது.
இதில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு கரபஸ் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரமான 234 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 5 நிமிடம் 24 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
பெல்ஜியம் நாட்டு வீரர் வான் ஏர்ட் வூட், ஸ்லோவேனியா நாட்டு வீரர் போககார் தாதேஜ் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar