Press "Enter" to skip to content

துப்பாக்கி சுடுதல் – 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதலில் முன்னதாக நடந்த பிரிசிசன் தகுதிச்சுற்றில் மானு பாகெர் 292-9X புள்ளிகளும், ராகி சர்னோபாட் 287-12 X புள்ளிகளும் பெற்றனர்.

பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மானு பாகெர், ராகி சர்னோபாட் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டி பிரிசிசன், ரேபிட் ஆகிய தகுதிச்சுற்றுகள் மூலம் நடத்தப்படும். இரு பிரிவுகளின் தகுதிச்சுற்றில் அதிக புள்ளிகள் பெறுபவர்களில் முதல் 8 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இன்று காலை ரேபிட் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் மானு பாகெர் 96, 97, 97 என 290 புள்ளிகள் பெற்றார். ராகி சர்னோபாட் 96, 94, 96 என 286 புள்ளிகள் பெற்றார்.

ஒட்டுமொத்தமாக மானு பாகெர் 582-17x, சர்னோபாட் 573-23 X புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »