இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இலங்கை:
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.
முதல் 20 சுற்றிப் போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாளை தொடரைப் போலவே டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி விடும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் 2-வது போட்டி நடைபெறும் நாளின் போது குர்ணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 2-வது போட்டி அடுத்த நாளுக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் குர்ணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த தீபக் சஹார், இஷான் கிஷன், மனிஸ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, சூர்யா குமார் யாதவ், பிரத்வி ஷா, யுஸ்வேந்திர சாஹல், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து முக்கிய வீரர்கள் இன்றி விளையாடிய இந்திய அணி, அடுத்து 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.
இந்நிலையில், குர்ணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar