Press "Enter" to skip to content

வில்வித்தையில் மூன்று தங்கப்பதக்கம் வென்று அசத்திய தென்கொரிய வீராங்கனை

காலிறுதியில் தீபிகா குமாரியை தோற்கடித்த தென்கொரிய வீராங்கனை ஷான் அன் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

வில்வித்தை பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியவர் தென் கொரியாவின் ஷான் அன். எந்தவித பதற்றமின்றி ஷான் அன் அம்புகளை எய்தினார். இதனால் தொடர்ந்து மூன்று ஷெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இவ்வளவு துல்லியமாக விளையாடுகிறாரே என இந்திய ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்த நிலையில், வில்வித்தையில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளா் ஷான் அன்.

கடந்த 24-ந்தேதி நடைபெற்ற கலப்பு அணி பிரிவில் நெதர்லாந்து அணிக்கெதிராக ஜி டியோக் கிம் உடன் இணைந்து வெற்றி பெற்றார்.

25-ம் தேதி நடைபெற்ற பெண்கள் அணியில் ஜாங், காங் உடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »