Press "Enter" to skip to content

50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல்: இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

அன்ஜூம் மவுத்கில் 1167-54X, தேஜஸ்வினி சவந்த் 1154-50X புள்ளிகளும் பெற்று முறையே 15 மற்றும் 33-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தனர்.

பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதலில் 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டியின் தகுதிப்பிரிவு இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் அன்ஜூம் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நீலிங் (Kneeling), ப்ரோன் (Prone), ஸே்டேண்டிங் (Standing) ஆகிய மூன்று முறைகளில் சுடுதல் வேண்டும். மவுத்கில் நீலிங் முறையில் 99, 98, 96, 97 (390), ப்ரோன் முறையில் 98, 100, 98, 99 (395), ஸ்டேண்டிங் 94, 96, 95, 97 (382) புள்ளிகள் பெற்றார். மொத்தமாக 1167-54x புள்ளிகளுடன் 15-வது இடம் பிடித்தார்.

தேஜஸ்வினி சவந்த் நீலிங் முறையில் 97, 92, 98, 97 (384), ப்ரோன் முறையில் 99, 98, 99, 98 (394), ஸ்டேண்டிங் 94, 93, 95, 94 (376) புள்ளிகள் பெற்றார். மொத்தமாக 1154-50X புள்ளிகளுடன் 33-வது இடம் பிடித்தார்.

இப்பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »